சென்னை, ஜன. 27–
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த ஜெட் ஏர்வேஸ் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பயணியின் நடையில் வித்தியாசம் இருந்ததை அதிகாரிகள் கவனித்தனர். அவரது சூட்கேஸ் மற்றும் ஆடைகளை சோதனை செய்த போது அதில் எதுவும் சிக்கவில்லை.
அவரது ஷுவில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை சோதனை செய்த போது அதில் 2 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ. 70 லட்சம்.
பிடிப்பட்ட வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரது பெயர் சர்புதீன் சென்னை மண்ணடியை சேர்ந்தவர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
source maalaimalar