சத்து நிறைந்த பூண்டு சூப்
தேவையான பொருட்கள்:
பூண்டுப் பற்கள் - 6
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியது
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்றவாறு
செய்முறை:
• வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்
• பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.
• ஒருகம்பியில் (வடை கம்பி அல்லது கூரான ஏதாவது கம்பி) பூண்டு பற்களை வரிசையாகக் குத்தி (தோல் நீக்கத் தேவையில்லை), அடுப்பு தீயில் காட்டி நன்றாக சுட்டெடுக்கவும். சற்று ஆறியவுடன், தோலை நீக்கி விட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
• ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும்.
• பின்னர் அதில் சுட்ட பூண்டு, 2 கப் தண்ணீர் சேர்த்து, கட்டி வைத்துள்ள துணி முடிச்சை அதன் நடுவில் வைத்து, மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
• பின்னர், துணி மூட்டையை வெளியே எடுத்து, சூப்பிலேயே பிழிந்து விடவும்.
• அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.
• தேவையான அளவிற்கு சூப் திக்கானதும், இறக்கி வைத்து, எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.
• கடைசியாக உப்பு, மிளகுத்தூள், சிறிது புதினா இலையை சூப்பின் மீது தூவி பருகவும்.
பூண்டுப் பற்கள் - 6
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியது
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்றவாறு
செய்முறை:
• வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்
• பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.
• ஒருகம்பியில் (வடை கம்பி அல்லது கூரான ஏதாவது கம்பி) பூண்டு பற்களை வரிசையாகக் குத்தி (தோல் நீக்கத் தேவையில்லை), அடுப்பு தீயில் காட்டி நன்றாக சுட்டெடுக்கவும். சற்று ஆறியவுடன், தோலை நீக்கி விட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
• ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும்.
• பின்னர் அதில் சுட்ட பூண்டு, 2 கப் தண்ணீர் சேர்த்து, கட்டி வைத்துள்ள துணி முடிச்சை அதன் நடுவில் வைத்து, மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
• பின்னர், துணி மூட்டையை வெளியே எடுத்து, சூப்பிலேயே பிழிந்து விடவும்.
• அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.
• தேவையான அளவிற்கு சூப் திக்கானதும், இறக்கி வைத்து, எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.
• கடைசியாக உப்பு, மிளகுத்தூள், சிறிது புதினா இலையை சூப்பின் மீது தூவி பருகவும்.