அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல் தாக்கியது: 3700 விமானங்கள் ரத்து
வாஷிங்டன், பிப். 14–
கடந்த மாதம் அமெரிக்காவில் பனிப்புயல் வீசியது. இதனால் கடுமையாக பனி கொட்டியது. மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு பொது மக்கள் பாதிப்பு அடைந்தனர்.
அதே போன்று தற்போது மீண்டும் அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கியது. இதனால் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஜார்ஜியா மற்றும் கலிபோர்னியா மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இங்கு கடுமையான பனி கொட்டுகிறது. இதனால் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கு 56 லட்சம் வீடுகளில் வாழும் மக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் வாஷிங்டனிலும் கடும்பனிப்புயல் வீசுகிறது. இதனால் இங்கு வந்து செல்லும் 3700 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோலினாவில் வீசும் பனிப்புயல் காரணமாக அங்கு கார் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகிறது.
அலபாமா–விர்ஜீனியாவிலும் பனிப்புயலின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடும் பனிப் பொழிவுக்கு இதுவரை 10 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜார்ஜியா மற்றும் தெற்கு கரோலினா மாகாணத்தில் அதிபர் ஒபாமா அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளார்.
source maalaimalar
