எரிமலை சீற்றத்தின் காரணமாக இந்தோனேசியாவில் மூடப்பட்டுள்ள 3 விமானநிலையங்கள்
சுரபயா, பிப்.14-
புவியியல் தன்மையில் எரிமலை வளையத்தைச் சேர்ந்த இந்தோனேசிய நாட்டில் 150 எரிமலைகள் உள்ளன. அவற்றுள், இன்னும் 130 எரிமலைகள் செயல்படும் தன்மையுடன் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எரிமலைகளுள் ஒன்றான 1,731 மீட்டர் உயரமுடைய கெலட் கடந்த சில வாரங்களாகவே குமுறிக் கொண்டிருந்துள்ளது. இதன் காரணமாக அந்த எரிமலையிலிருந்து 10 கி.மீ சுற்றளவில் உள்ள 36 கிராமங்களில் வாழ்ந்துவரும் 2 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த எரிமலை சீறியுள்ளது. அது வெடித்துச் சிதறிய சப்தம் 130 கி.மீ தொலைவில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவிலும், அதற்கு அப்பால் உள்ள ஜோக்யகர்டாவிலும் கேட்டுள்ளது. அந்த சீற்றத்தில் வெளியேறிய சாம்பல் படிவங்கள் இந்த நகரங்களின் தெருக்கள் முழுவதும் பரவியுள்ளன.
எரிமலையை ஒட்டியுள்ள பண்ணைகளில் இருக்கும் விலங்குகள் முழுவதும் சாம்பல் படிந்து காணப்படுவதை ஊடக நிகழ்ச்சிகள் வெளிப்படுத்தின. இன்று காலை பரவிய சூரிய வெளிச்சத்தில் எரிமலை சீற்றத்தின் பாதிப்பு வெகுதூரம் வரை பரவியிருந்தது தெரியவந்தது. ஆயினும், உயிர்ச்சேதங்களோ, காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்களோ இன்னும் வெளிவரவில்லை.
எரிமலை சாம்பலும், அதன் விளைவாக எழுந்துள்ள தூசு மண்டலமும் பார்வைத்தன்மையை வெகுவாகக் குறைத்துள்ளதாலும், விமான எஞ்சின்கள் பாதிப்படையும் என்பதினாலும் சுரபயா,சோலோ மற்றும் ஜோக்யகர்டா ஆகிய மூன்று நகரங்களிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் பம்பங் எர்வன் தெரிவித்துள்ளார்.
source maalaimalar
புவியியல் தன்மையில் எரிமலை வளையத்தைச் சேர்ந்த இந்தோனேசிய நாட்டில் 150 எரிமலைகள் உள்ளன. அவற்றுள், இன்னும் 130 எரிமலைகள் செயல்படும் தன்மையுடன் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எரிமலைகளுள் ஒன்றான 1,731 மீட்டர் உயரமுடைய கெலட் கடந்த சில வாரங்களாகவே குமுறிக் கொண்டிருந்துள்ளது. இதன் காரணமாக அந்த எரிமலையிலிருந்து 10 கி.மீ சுற்றளவில் உள்ள 36 கிராமங்களில் வாழ்ந்துவரும் 2 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த எரிமலை சீறியுள்ளது. அது வெடித்துச் சிதறிய சப்தம் 130 கி.மீ தொலைவில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவிலும், அதற்கு அப்பால் உள்ள ஜோக்யகர்டாவிலும் கேட்டுள்ளது. அந்த சீற்றத்தில் வெளியேறிய சாம்பல் படிவங்கள் இந்த நகரங்களின் தெருக்கள் முழுவதும் பரவியுள்ளன.
எரிமலையை ஒட்டியுள்ள பண்ணைகளில் இருக்கும் விலங்குகள் முழுவதும் சாம்பல் படிந்து காணப்படுவதை ஊடக நிகழ்ச்சிகள் வெளிப்படுத்தின. இன்று காலை பரவிய சூரிய வெளிச்சத்தில் எரிமலை சீற்றத்தின் பாதிப்பு வெகுதூரம் வரை பரவியிருந்தது தெரியவந்தது. ஆயினும், உயிர்ச்சேதங்களோ, காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்களோ இன்னும் வெளிவரவில்லை.
எரிமலை சாம்பலும், அதன் விளைவாக எழுந்துள்ள தூசு மண்டலமும் பார்வைத்தன்மையை வெகுவாகக் குறைத்துள்ளதாலும், விமான எஞ்சின்கள் பாதிப்படையும் என்பதினாலும் சுரபயா,சோலோ மற்றும் ஜோக்யகர்டா ஆகிய மூன்று நகரங்களிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் பம்பங் எர்வன் தெரிவித்துள்ளார்.
source maalaimalar
