சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின
பீஜிங், பிப். 12-
சீனாவின் வடமேற்கு பகுதியில் உய்கர்ஸ் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் கடுமையாக குலுங்கின. மக்கள் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து வெளியேறினர். ஆனால், இதன் பாதிப்பு மற்றும் சேதம் பற்றி தகவல்கள் வெளியாகவில்லை.
யுடியான் பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5.19 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக சீன நிலநடுக்க தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 12 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இதேபோல் 5.24 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் சிறிது நேரம் நீடித்ததாக கூறப்பட்டுள்ளது.
source maalaimalar
சீனாவின் வடமேற்கு பகுதியில் உய்கர்ஸ் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் கடுமையாக குலுங்கின. மக்கள் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து வெளியேறினர். ஆனால், இதன் பாதிப்பு மற்றும் சேதம் பற்றி தகவல்கள் வெளியாகவில்லை.
யுடியான் பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5.19 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக சீன நிலநடுக்க தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 12 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இதேபோல் 5.24 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் சிறிது நேரம் நீடித்ததாக கூறப்பட்டுள்ளது.
source maalaimalar
